வியாழன், அக்டோபர் 28, 2004

வாசகசாலை

என் சிறுவயதில் எங்கள் ஊரில் உள்ள வாசகசாலையில்
போய்ப் படிக்க மிகவும் ஆசைப்படுவேன்,ஆனால் மிகவும்
சிறுவயதென்பதால் என் அப்பாவின் வயதொத்தவர்கள் எல்லாம்
உள்ளே அமர்ந்து படிப்பதைப் பார்த்து அவர்கள் எல்லாம்
என்ன சொல்வார்களோ என்ற பயத்தில் வாசலோடு ஓடி வந்து
விடுவேன், தினமும் இது தொடரும்.

அதன் பிறகு அதை மறந்தே போய்விட்டேன் இன்று இங்கு
எனக்கென்று ஒரு வாசக சாலை!,இந்த என் புதிய இடத்திற்கு
என்ன பெயர் வைப்பது என யோசிக்கும் போது என்றோ மனதின்
ஆழத்தில் மூழ்கிக் கிடந்த 'வாசக சாலை' திடீரென்று வெளிவந்து
பழைய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வைத்து விட்டது!

நிறைய எழுத ஆசையுடன்..
ரங்கமீனா.