வெள்ளி, ஏப்ரல் 14, 2006

"புத்தாண்டு வாழ்த்துகள்"

புதிய நம்பிக்கையோடும்
புத்துணர்ச்சியோடும்
புதுப்பொலிவோடும்
நல்லதை செய்யவும்
நல்லதை நினைக்கவும்
நல்வழி காட்டவும்
இயற்கை வளம்
குன்றாதிருக்கவும்
பகை,போர்,பசி,பிணி
இல்லாதிருக்கவும்
உலகமெங்கும்
அமைதியும் நிம்மதியும்
பெருகவும் இறைவனை
வேண்டி அனவருக்கும்

"புத்தாண்டு வாழ்த்துகள்"

புதன், ஏப்ரல் 12, 2006

நடை அனுபவம்

கொஞ்ச நாளாவே நடக்கறதை நெறுத்திட்டேன் ஏன்? சோம்பேரித்தனமா இல்லை நேரமில்லாததாலா? என்னவென்றே தெரியலை இன்றுமட்டும் இன்றுமட்டும்னு ஒரேயடியா நெறுத்திட்டேன்.

இனி முடியாது மறுபடி தொடரணும் என்ற முடிவோடு இரண்டு நாள் முன் மீண்டும் நடைபயிற்சியை ஆரம்பித்துவிட்டேன்.

வழியில் எதிர்படுபவர்கள் 'ஹாய் என்று கைகாட்டுபவர்களும்,என்ன ரொம்ப நாளா ஆளைக்காணும் என்று புன்னகைக்கிறவர்களுமாய் 'என்ன முன்பு இருந்ததற்கு இப்போ மெலிஞ்சிட்டீங்களே?!இல்லையே அப்படியா தெரியுது!
(இரண்டுகிலோ கூடியிருப்பது எனக்குத்தானே தெரியும் ஹி ஹி)இப்படி சந்தோஷமாய்!

எத்தனை மாதங்களுக்கப்புறம் இந்தப் பக்கம் வருகிறேன், ஆனாலும் அங்கு ஒருவீட்டில்(என் சினேகிதர்கள்!)மூன்று நாய்குட்டிகள்(?)(என்ன ஒற்றுமை!) மறக்காமல் ஓடிவந்து கேட்டின் அருகே நின்று கொண்டு வாலை ஆட்டி ஆட்டி(இப்படி கூட வாலை ஆட்டமுடியுமா என்ன!) நாங்கள் உன்னை மறக்கவில்லை தெரியுமா என்பது போல் அவைகளின் அன்பை தெரிவிக்க,(ஒவ்வொரு நாளும் அவ்வீட்டைக் கடக்கும் போதும் சும்மா போக மாட்டேன் அவைகளைக் கூப்பிட்டு கொஞ்சிவிட்டுதான் போவேன்) ஒரு நாளாவது ஏதாகிணும் பிஸ்கட் கொண்டுவந்து கொடுக்கணும் என்று மனதில் நினைத்ததோடு சரி அதை போடப்போனால் அதன் உரிமையாளர்கள் விரும்ப மாட்டார்களே ஏதும் சொல்லிவிட்டால்)என் பங்கிற்கு நானும் கையை காட்டி அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாது போய்க் கொண்டே இருப்பேன் ஒரு(பெரிய) சுற்று சுற்றி திரும்பவும் அங்கு வரும்போது சிறிது தூரத்திலேயே நான் வருவதை அறிந்து மீண்டும் உள்ளேயிருந்து குடுகுடுவென்று முன்பக்கம் வந்து தயாராய் வாலை ஆட்டிக் கொண்டு நிற்கும் அழகு!.

அப்பாடி நடக்க ஆரம்பித்தபிறகு என்ன சுகம் என்ன சுறுசுறுப்பு!கால்களில்மட்டுமல்ல,மொத்த உடம்பில், மனத்தில் எங்கிருந்துதான் இத்தனை உற்சாகம் வருகிறதோ!நடக்கிறதால எவ்வளவு ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கிறது!ஆனால் ஏனோ நிறையபேர் இதை ஒரு பெரிய வேலை(என்னன்னமோ வேலைகள் எல்லாம் செய்கிறார்கள்)என நினைத்து
ஒதுக்கி விடுகிறார்கள்.

எடை கூடிவிட்டது சாப்பாட்டை குறைக்கணும் அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக்கூடாது என்று எல்லாத்தையும் குறைத்து கடைசியில் எதுவும் செய்யமுடியாமல் உடம்பில் சத்தில்லாமல் பலமிழந்து விடுகிறார்கள்,ஏன் இப்படி?
இவர்களுக்கு நான் சொல்வேன் காலையிலோ மாலையிலோ ஒரு நடை போய்விட்டு வாருங்கள் உடம்புக்கு மட்டுமல்ல
மனதிற்கும் நல்லது என்று, யார் கேட்கிறார்கள்.(ஏதோ விளம்பரத்திற்கு அட்வைஸ் பண்ணுவது போல் இருக்கோ? :))


அய்யய்யோ மழை ஆரம்பிச்சுருச்சே இனி எங்கே நடக்கிறது ஒரே ஓட்டம்தான்! :)

எத்தனை பேருங்க நடக்கிறீங்க? சொல்லுங்கள் உங்கள் நடை அனுபவத்தை

அனைவருக்கும் 'புத்தாண்டு வாழ்த்துகள்'