திங்கள், டிசம்பர் 10, 2007

மலைக்கோட்டை

என்னவோ இப்போதெல்லாம் ஒண்ணுமே எழுத தோணலை. தோணலைன்னு சொல்லிகிட்டே தோணறதை எழுதலாம்னு...

ஒரு வாரமா தொண்டை வலி,வரட்டு இருமல் இப்படி ஒரேயடியா படுத்துது.விடாத மழை காரணமா இல்ல யாருகிட்டெ இருந்தாவது ஒட்டிகிச்சா தெரியலை.

எது எப்டி இருந்தாலும் அதோடே ஒரு வாரமா வீட்லயும் வெளியிலெயுமா ஒரே விருந்துதான்!இன்னைக்கு எல்லோரும் அங்கயும் இங்கயுமா சென்றதும் வீடு வெறிச்சென்று அமைதியா இருக்கு.

எழுத வேண்டியதெல்லாம் அப்படியே கிடக்குது நேத்து மதிய சாப்பாடுக்கப் புறம் போரடிச்சுப்போயி டிவியை தட்டினா அப்பத்தான் சரியா 'வெள்ளித்திரை' யில் ஆரம்பிச்சிருந்திருந்தது விஷால் நடிச்ச'மலைக்கோட்டை' என்ன்ன்ன படம்மப்பா இப்பல்லாம்! நாயகன் பஸ்ல போயி கிட்டுருக்கானாம் அது ஒரு இடத்துல போக்குவரத்து நெரிசல்ல மாட்டி கிட்டு அப்படியே நின்னுடுதாம் அந்த இடத்துல ரோட்டோரத்துல ஒரு வீடாம் அந்த நேரம் பாத்து தேவதை போன்ற பெண்ணொருத்தி அந்த மொட்டை மாடிக்கு வந்து காக்காக்கு(அதோடு கொஞ்சி கொஞ்சிப்பேசிகிட்டு )சோறு வக்கிறாளாம் நம்ப நாயகன் அதைப்பாத்து அப்படியே மயங்கி... (அட பொங்கப்பா...)அடடா டா டா டா.. இப்படியே இப்படியே... என்ன கதை! என்ன கதை!! நான் ஒண்ணும் சொல்ல்லல்லப்பா...