செவ்வாய், ஏப்ரல் 13, 2010

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

                                    கருப்பர் கோவில்

கருப்பண்ணன் வாழ்கின்ற
ராங்கியம் சென்றிட்டால்
காலமும் காத்து நிற்பான்.

கண்போன்ற மாதராம்
ஏகாத்தா ராக்கம்மை
கருணையாம் அன்பை ஈவார்

விருப்பின்றி வெறுப்பின்றி
வந்திட்ட அனைவருக்கும்
விரும்பிய வரம் அருள்வான்

விளயாத நிலத்தையும்
விளவித்து காட்டியே
வித்தைகள் புரிந்து நிற்பான்

உருகியே தினம் பாடி
உள்ளத்தில் வைத்திட்டால்
உலகினை ஆளவைப்பான்

உறவென்று அவனையே
உறுதியாய் பற்றிட்டால்
உண்மைகள் புரியவைப்பான்

இரு பொழுதும் விளக்கேற்றி
இல்லத்தில் கும்பிடவே
இன்முகம் காட்டிவருவான்

இல்லாமை நிலைபோக்கி
எல்லாமும் பெற்றிடவே
என்றென்றும் அருள் புரிவான்

-அரிமழம் செல்லப்பா