ஞாயிறு, மே 30, 2010

அற்புதம்!



கைலாஷ்! வார்த்தையை உச்சரிக்கும்போதே உள்ளத்தில் ஏற்படும் பரவசத்தை என்னவென்று சொல்ல! உச்சரிப்பதற்கே இந்த நிலை என்றால் நேரில் 
சென்றால்!சொல்ல வார்த்தைகள் இல்லை.


அப்படியொரு பேரு பெற்றவர்கள்!வணங்குகிறேன் இவர்களை.

நன்றி:   திருக்கயிலாய நந்தி கிரி வலம் 

புதன், மே 19, 2010

நாதஸ்வரம்

சீரியல் என்றாலே மனதில் ஒரு வெறுப்பு. அதை மாற்றி விட்டது சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் அரங்கேறிய இந்த நாதஸ்வரம்! ஆனாலும் மனதிற்குள் சின்ன சந்தேகம், ஒரு வேண்டுதல். போகப் போக நாடகத்தின் தன்மை மாறி விடாமல் இதை இப்படியே தொடர வேண்டும் இதன் இயக்குனர் என்று.

இயல்பான நடையில் எந்த வித ஆடம்பரம் அலட்டல் மேல்பூச்சு ஏதும் இல்லாத ஒரு தொலைக்காட்சி சீரியல் இந்த நாதஸ்வரம்! இதில் தோன்றும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் நடிப்பும்..! ம்ஹூம் நடிப்பென்றே சொல்லக்கூடாது! அவர்கள் அவர்களாவே வாழ்கிறார்கள்! சூழ்நிலையும் அவ்வாறே!

நாடகம் என்பதை காட்டிலும் அன்றாடம் சாதாரண குடும்பத்தினரின் வீட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகளை (இடையிடையே நகைச்சுவை கலந்து) அப்படியே வீடியோ பதிவு போல்! நமக்கு அளித்திருக்கிறார், இதன் இயக்குனரும், கதாநாயகனுமான திருமுருகன்.

இன்னும் இது பற்றி சொல்லலாம்! மொத்தத்தில் (மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு :) நல்ல இசை!




வியாழன், மே 13, 2010

ஒரு வழி சொல்லுங்களேன்

ரொம்ப நாளாய் பாடாய் படுத்தற விஷயம். 
கொஞ்சநேரம் சமையல் கட்டைவிட்டு வந்தால் 
போதும் உடனே ஃப்ரிஜுக்கு கீழிருந்தோ அல்லது 
ஏதாவது இடுக்கிலிருந்தோ சத்தமில்லாமல் 
வந்து சட்டென்று சாப்பாட்டு மேஜையின் 
மேல் ஏறி உலா வர ஆரம்பிக்கும். நாம் வருவது 
எப்படித்தான் தெரியுமோ நாம் ஒரு காலை உள் 
வைக்கும்போதே கண்டுகொண்டு மேஜைக்கு 
கீழே எங்காவது நழுவி அப்படியே பதுங்கிக்
கொள்ளும் அப்போத்தானே மறுபடி நாம் 
நகர்ந்தால் சட்டென்று வெளிவந்து (எதிலடா 
வாய் வைக்கலாம்னு)விட்டஇடத்தில் இருந்து 
தொடர முடியும்.

அப்படி உலாவரும்போது தப்பித்தவறி நம் கண்களில்  
பட்டாலோ வெறுக்கென்று நம் உடலில் ஒரு உணர்வு 
தோன்றுமே அய்யே.. அவ்வளவுதான் அதுக்கப்புறம்  
மேஜை மேலிருக்கும் அத்தனை பண்டங்கள்மேலும்
(மூடி இருந்தால்கூட)சந்தேகம் வர ஆரம்பிக்கும் இதில்  
ஏறி இருக்குமோ அதில் வாய் வைத்திருக்குமோ என்று 
எதைப்பார்த்தாலும் அருவருப்பு.

சரி பாவம் சாப்பாடு கிடைக்காமல்த் தானே இப்படி  
அலையுதுகள் அதனாலே நாமே வேளா வேளைக்கு  
சாப்பாடு போட்டுட்டா அப்புறம் இந்த தொந்தரவு  
இல்லை அதுக பாட்டுக்கு சாப்பிட்டுட்டு தொந்தரவு 
செய்யாமலாவது இருக்கும் என்றுஅதுங்க பதுங்கற  
இடமா பாத்து பாத்து சோறு அல்லது தோசை இனிப்பு  
எல்லாம் நம்ம சாப்பிடறதை போடணும் அதுகளுக்கு  
தெரியும் இல்லாட்டினா மறுபடி நம்மோட பங்குபோட 
மறுபடி மேஜை மேல ஏறிரும்ல(எல்லாம் ஒரு
நினைப்புத்தான்:) என்று வகை வகையா போட்டா 
அதை மோந்து கூட பாக்காது பழையபடி மேஜைதான்! 
அங்கே போட்ட சாப்பாடு காஞ்சுபோய். கிடக்கும் ம்ம்..

இதுல இன்னோரு கஷ்டம் நாம நடக்கும் போது  
கால்களுக்கு இடையில் குறுக்கும் நெடுக்கும் ஓடி  
அதும்மேல மிதிக்காம இருக்க நாம் இ..இ.. ஈ..ஏ..இ.. 
ன்னு(வினோதமான சத்தங்களுடன்)  பரதநாட்டியம் 
வேற கத்து வச்சுக்கனூம்.

இந்த பல்லியை(அதுக்கு எந்த தொந்தரவும் செய்யாம) 
விரட்டறதுக்கு என்னதான் வழி? தயவு செய்து 
யாராவது சொல்லுங்களேன்.






சனி, மே 08, 2010

அனைவருக்கும் அன்னையானவள் !

அன்னையர் அனைவருக்கும்  அன்பான வாழ்த்துகள்!

குழுமத்தில் நண்பர் தமிழ்த்தேனி அவர்கள் இட்ட இந்த
பாடல் வெகுவாக கவர்ந்தது.  அன்னையர் தினத்தின்
நினைவாக அதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.


கற்பெனும் தரத்தை கண்ணியமாய்க் காத்து
அப்பனின் விந்தை  யற்புதப் பந்தில்
வாங்கித்  தாங்கி கருவாக்கி  உருவாக்கி
இடிபோன்ற  வலிதாங்கி இடைவழியே
வெளிவாங்கி கனக முலைவழியே
உதிரத்தைப் பாலாக்கி அன்போடு
அரவணைத்தூட்டி   கைகால் முளைக்க
வைத் தறிவும் ஆயுளும் அணுக்குள்
நுணுக்கி   அற்புதமாய் காத்து
அப்பனையும் அடையாளம் காட்டிய
அற்புதப் படைப்பாளி  அம்மா!
அம்மா  என்றால்  அம்மா

-தமிழ்த்தேனீ