வியாழன், டிசம்பர் 08, 2011

இனிய கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்!



முதல்வருக்கு மரியாதை
                                                              


வியாழன், செப்டம்பர் 22, 2011

ஸ்ரீமத் பாகவதம்!


தன் கம்பீரமான குரலில் சொல்ல சொல்ல ஒவ்வொரு
வார்த்தைகளும் நம் மனதில் அப்படியே ஜம்மென்று ஏறி
அமர்ந்துகொள்கிறது! நம்மையறியாமல்கவனம் சிதறாமல்
உபன்யாசத்தையே கேட்கவைப்பது எது?அவரின் கம்பீரமான
குரலா?மிகத்தெளிவான உச்சரிப்பா?அவரிடம் உள்ள
தெய்வீகத்தன்மையா எது?இவையெல்லாமுமா?
ஸ்ரீமத் பாகவதம் கேட்பவர்களை கட்டிப்போட்டுவிடுகிறார்
வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள்!

எல்லோரும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கவேண்டும்
என்ற ஆர்வத்தில் இதைஎடுத்து வந்தேன்.இது முதல்பகுதி
YouTube ல் அடுத்தடுத்த பகுதிகள் வரிசையாக உள்ளது 
அவசியம் கேட்கவேண்டும் மனதிற்கு இதமாக இருக்கும்.

ஸ்ரீமத் பாகவதம் கேட்பதே தவம்!.


http://www.youtube.com/watch?v=UixNktiVqG0&feature=share





திங்கள், ஆகஸ்ட் 01, 2011

நிவேதா


அழகாக சிறு குழந்தைகளும் புரிந்துகொள்கிறார் போல
அருமையாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள்
ஏற்பாட்டாளர்கள்!.

மேடையில் வண்ணமயமாக அடுத்தடுத்து ஒவ்வொரு காட்சிகளும் அதற்கேற்ற பாடலுடன் அரங்கேற…


இந்த 27 அன்று மூன்று வயது ஆகப்போகும் நிவேதா
மிகவும் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தவள்
உற்சாகத்தோடு…

’அம்மா… பிள்ளையாரம்மா!’

’அம்மா ஹனுமான்!’

அடுத்து வந்த முருகரை தெரியவில்லை(!) ம்..ம்..
என அவள் யோசிக்க..

’இது முருகாசாமி.. நிவேதா..’

’ம்..ம்..முருகா சாமி….’ என ஆமோத்தித்தாள்

’ஹேய்..! அம்மா..அம்மா…கிருஷ்ணா!’

அத்துடன் கடவுள்களின் அணிவகுப்பு முடிந்து அடுத்து அரங்கேறிய காட்சியை பார்த்தவள் அம்மாவை திரும்பி பார்த்துக்கொண்டே கேட்டாள்…

’அம்மா எங்கே பிரம்மா?’

தூக்கிவாரிப்போட்டது!


ஞாயிறு, மே 08, 2011

அன்னையர் தின நல் வாழ்த்துகள்!


அன்னையர் அனைவருக்கும் அன்பான நல் வாழ்த்துகள்!

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள். மழலை சொல்...


இந்த பெரிய மனிதர்கள் இருவரும்பேசிக்கொள்வதை....
கேட்டுகிட்டே இருக்கலாம் போல.. !! :)

சனி, மார்ச் 12, 2011

கனிமொழி..


முன்பு ஒரேயொரு தடவை நான் பார்த்து அச..ந்து
(அசந்துன்னா களச்சு)போன ஒரு படம் பத்தி விமர்சனம் 
எழுதினேன்,எனக்கு சினிமா விமர்சனமெல்லாம் எழுதி 
பழக்கமில்லை.அதுக்கப்புறமா இப்போதுதான்..

உண்மையில அசத்தல் படம்!கனிமொழிபடத்தை
பத்தி  சொல்லணும்னா..ஒருத்தன் ஒரு பொண்ண 
விரட்டி விரட்டி காதலிக்கிறான்..கூட நண்பர்கள்.. 
கடைசியில....(ம்ஹூம் அதை சொல்லிட்டன்னா
அப்புறமா இப்படி கதையை சொல்லிட்டா எப்படி
ன்னு கோச்சுக்குவீங்கல்ல..) சே..எல்லா படத்து
லயும் இதத்தானே சொல்றாங்க இதுல என்ன
அசத்தல்ன்னு கேக்குறீங்க... கேக்குது..கேக்குது :)

அதை எடுத்து...முடிச்சிருக்கிறவிதம் இருக்கே..
ப்ரமாதம்! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் ரசித்து
அனுபவித்ததை எல்லோரும் அனுபவிக்கவேண்டும்
என்ற ஆர்வம்தான் இந்த பகிர்தல் அவ்வளவுதான்!   

கதையாகட்டும்,அதன் உடே ஓடும் நகைச்சுவை
யாகட்டும்!கதாபாத்திரங்களாகட்டும்,கதை நடக்கிற 
களமாகட்டும் எல்லாம் அசத்தல்!சும்மா அலட்டிக்காம
அனாயசமான அருமையான படம் எடுத்துருக்காங்க!



இந்தப்படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசுவாமி என்பவர் 
அவருக்கு என் வாழ்த்துகள்!

(ஏன் இந்த படத்தை பத்தி யாருமே சொல்லலை!!)

முக்கியமா ஒண்ணு... 

இந்த கனிமொழியப்பற்றித்தான் சொல்ல வந்தேன் 
நீங்களா ஏதாச்சும் நெனைச்சு வந்தா அதுக்கு நான் 
பொறுப்பில்லைJ)

(எல்லோரும் பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம்
பேசுறாங்க…என்னவோ எனக்கு தெரிந்தது.. :))

செவ்வாய், மார்ச் 01, 2011

ஸ்வர்ணலிங்கேஸ்வரர்!


                     திருச்சிற்றம்பலம்.


காசியில் நகரத்தார் சத்திரத்தில் ஒவ்வொரு
வருடமும் தீபாவளியன்று ஸ்வர்ணநாயகி
விசாலாட்சி மட்டுமே கொலுவிருந்து பக்தர்களுக்கு
காட்சி தந்த அம்பிகையின் பக்கத்தில் ஸ்வர்ண
லிங்கேஸ்வரரும் இருந்தால் எத்தனை அழகு!
என நினைத்த அடியாரின் எண்ணம் இன்று
நகரத்தார்களின் ஒத்துழைப்பினால் ஈடேற
அருள்  புரிந்த அழகு நாயகனின் அற்புத தரிசனம்!



வைரப் பிறை,வைர விபூதிபட்டையுடன் 3 ½ கிலோ
தங்கத்தில் செய்த சிவலிங்கம் காசி நகரவிடுதிக்கு
கொண்டு செல்லும் முன் பிள்ளையார்பட்டி உள்ளிட்ட
ஒன்பது நகரத்தார் கோவில்களுக்கும் சென்று பின்
எழுபத்தைந்து நகரத்தார்களின் ஊர்களுக்கும் எடுத்து
சென்று பிறகு(23)சென்னையில் திருவெற்றியூர் சென்று
நகரத்தார் சத்திரத்தில் வைத்து(சென்ற இடமெல்லாம் 
பொதுமக்கள் காண)அபிஷேக ஆராதனைகள் செய்து 
கோலாகலமாக பிப்ரவரி 26 (2011) திகதி டெல்லிக்கு
சென்று காசி நகரத்தார் சத்திரத்தில் சிவராத்திரியன்று 
ஸ்வர்ணாம்பிகையின் அருகில் ஸ்வர்ணலிங்கேஸ்வரர் 
பிரதிஷ்டை செய்யப்பட்டு அடியார்களுக்கு அருட்காட்சி
தருவார்.
                                             
                     திருச்சிற்றம்பலம்









சனி, பிப்ரவரி 12, 2011

(செட்டிநாட்டின்) எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.



செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தின் வெண்பாவை முன் பதிவில் பார்த்தோம்.

இப்பொழுது அந்த எழுபத்தைந்து ஊர்கள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தை

பற்றிய வெண்பா.

 

கோட்டையிலே மூன்று குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தாகும்-நாட்டமிகும்
ஊர் பத்தாம் ஏரி, குளம், ஊருணி ஒவ்வொன்றாம்
சேர் வயல்கள் ஐந்தென்று செப்பு.

மங்கலம் மூன்று,வரம் ஒன்றே ஆறுபுரம்,
திங்கள் வகை ஒவ்வொன்று சீர் புரிகள் நான்கு,
பிற ஊர்கள் பத்து  சிலை குறிச்சி ஒன்றோ(டு)
அறம் வளர்ப்பார் ஊர் எழுபத்தைந்து.

மேலே குறிப்பிட்டுள்ள ஊர்கள் எழுபத்தைந்தின் பெயர்கள்:

கோட்டையிலே மூன்று::
1.தேவகோட்டை, 2.அலவாகோட்டை,
3.நாட்டரசங்கோட்டை.

குடிகளிலே ஆறு:
1.அரியக்குடி,2.ஆத்தங்குடி,3.பலவான்குடி,4.காரைக்குடி,
5.பனங்குடி,6.கீழப்பூங்குடி

பட்டி இருபத்து:
1.சிறுகூடல்பட்டி, 2.மகிபாலன்பட்டி,3.கண்டவராயன்பட்டி, 4.மிதிலைப்பட்டி,5.ஆவினிப்பட்டி6.குருவிக்கொண்டான்
பட்டி,7.கீழச்சிவல்ப்பட்டி,8.வேந்தன்பட்டி,9.வலையபட்டி,
10.புதுப்பட்டி,11.கொப்பனாபட்டி,12..நற்சாந்துபட்டி,
13.பனையப்பட்டி,14.வேகுப்பட்டி,15.மதகுபட்டி,16.கடியாபட்டி,
17.நேமத்தான்பட்டி,18.கல்லுப்பட்டி,19.தேனிப்பட்டி,
20.உலகம்பட்டி.

ஊர் பத்து:
1.கோட்டையூர், 2.பள்ளத்தூர், 3.கண்டனூர், 4.செவ்வூர், 
5.ஒக்கூர்,6.தெக்கூர்,7.உறையூர்,8.வெற்றியூர்,9.செம்பனூர்,
10.அமராவதிபுதூர்.

ஏரி,குளம்,ஊருணி ஒவ்வொன்று:
1.பாகனேரி, 2.கருங்குளம், 3.தாணிச்சாஊருணி

வயல்கள் ஐந்து:
1.புதுவயல்,2.சிராவயல்,3.ஆராவயல்,4.எ.சிறுவயல்,5.
ஒ.சிறுவயல்.

மங்கலம் மூன்று:
1.பட்டமங்கலம்,2.கொத்தமங்கலம்,3.காளையார்மங்கலம்.

வரம் ஒன்றே:
1.ராயவரம்.

ஆறு புரம்:
1.நாச்சியாபுரம்,2.நடராஜபுரம்,3.கே.லக்ஷ்மிபுரம்,
4.வி.லக்ஷ்மிபுரம்,5.ராமச்சந்திரபுரம்,6.சொக்கனாதபுரம்.

திங்கள் வகை ஒவ்வொன்று:
1.குழிபிறை,2.விராமதி,

சீர் புரிகள் நான்கு:
1.மேலைச்சிவபுரி,2.கோட்டையூர்அளகாபுரி, 3.கே.அளகாபுரி,
4.பி.அளகாபுரி.

பிற ஊர்கள் பத்து:
1.செட்டிநாடு,2.கானாடுகாத்தான்,3.கண்டரமாணிக்கம்,
4.கல்லல்,5.கோனாபட்டு,6.மானகிரி,7.நெற்குப்பை,
8.ராங்கியம்,9.அரிமளம்,10.சக்கந்தி.

சிலை,குறிச்சி ஒன்றோடு:
1.விரயாச்சிலை,2.பூலாங்குறிச்சி.

வியாழன், பிப்ரவரி 03, 2011

செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தை பற்றிய வெண்பா.

கோட்டையிலே மூன்று
குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தாகும்-
நாட்டமிகும் ஊர் பத்தாம்
ஏரி, குளம், ஊருணி ஒவ்வொன்றாம்
சேர் வயல்கள் ஐந்தென்று செப்பு.

மங்கலம் மூன்று,வரம் ஒன்றே
ஆறுபுரம்,திங்கள் வகை ஒவ்வொன்று
சீர் புரிகள் நான்கு,பிற ஊர்கள் பத்து
சிலை குறிச்சி ஒன்றோ(டு)
அரம் வளர்ப்பார் ஊர் எழுபத்தைந்து!.

ஞாயிறு, ஜனவரி 16, 2011

வெங்காய மாலை!

விலை மதிப்பில்லா.. வெங்காய மாலை!

இன்று இந்த வெங்காயம் இப்படி கிடு கிடுவென்று
விலை ஏறும் என்று என் உள்ளுணர்வு கூறியதாலோ
என்னவோ அன்றே( 20 வருடங்கள் முன்) இந்த அழகான
வெங்காயமாலையை செய்தேன்!

வியாழன், ஜனவரி 13, 2011

பொங்கலோ பொங்கல்!

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
நலமெலாம் பெற்று நாடு செழித்திட 
இனிய நல் வாழ்த்துகள்!

வியாழன், ஜனவரி 06, 2011

                           இதயம் நிறைந்த இனிய 
                       புத்தாண்டு நல் வாழ்த்துகள்! 

இவ்வாண்டு புத்தாண்டு குதூகலத்தில் வாழ்த்துகள் சொல்ல
தாமதமாகி விட்டது! அதனாலென்ன..

உலகமெங்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் என்றென்றும்
இக்குதூகலம் நீடித்து நிலைத்து நிற்க உளம் உருக
இறைவனை வேண்டி வணங்குகிறேன்.

என்றென்றும் எங்கும் மகிழ்ச்சி நிலவட்டும் வாழ்த்துகள்!