சனி, பிப்ரவரி 12, 2011

(செட்டிநாட்டின்) எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.



செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தின் வெண்பாவை முன் பதிவில் பார்த்தோம்.

இப்பொழுது அந்த எழுபத்தைந்து ஊர்கள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தை

பற்றிய வெண்பா.

 

கோட்டையிலே மூன்று குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தாகும்-நாட்டமிகும்
ஊர் பத்தாம் ஏரி, குளம், ஊருணி ஒவ்வொன்றாம்
சேர் வயல்கள் ஐந்தென்று செப்பு.

மங்கலம் மூன்று,வரம் ஒன்றே ஆறுபுரம்,
திங்கள் வகை ஒவ்வொன்று சீர் புரிகள் நான்கு,
பிற ஊர்கள் பத்து  சிலை குறிச்சி ஒன்றோ(டு)
அறம் வளர்ப்பார் ஊர் எழுபத்தைந்து.

மேலே குறிப்பிட்டுள்ள ஊர்கள் எழுபத்தைந்தின் பெயர்கள்:

கோட்டையிலே மூன்று::
1.தேவகோட்டை, 2.அலவாகோட்டை,
3.நாட்டரசங்கோட்டை.

குடிகளிலே ஆறு:
1.அரியக்குடி,2.ஆத்தங்குடி,3.பலவான்குடி,4.காரைக்குடி,
5.பனங்குடி,6.கீழப்பூங்குடி

பட்டி இருபத்து:
1.சிறுகூடல்பட்டி, 2.மகிபாலன்பட்டி,3.கண்டவராயன்பட்டி, 4.மிதிலைப்பட்டி,5.ஆவினிப்பட்டி6.குருவிக்கொண்டான்
பட்டி,7.கீழச்சிவல்ப்பட்டி,8.வேந்தன்பட்டி,9.வலையபட்டி,
10.புதுப்பட்டி,11.கொப்பனாபட்டி,12..நற்சாந்துபட்டி,
13.பனையப்பட்டி,14.வேகுப்பட்டி,15.மதகுபட்டி,16.கடியாபட்டி,
17.நேமத்தான்பட்டி,18.கல்லுப்பட்டி,19.தேனிப்பட்டி,
20.உலகம்பட்டி.

ஊர் பத்து:
1.கோட்டையூர், 2.பள்ளத்தூர், 3.கண்டனூர், 4.செவ்வூர், 
5.ஒக்கூர்,6.தெக்கூர்,7.உறையூர்,8.வெற்றியூர்,9.செம்பனூர்,
10.அமராவதிபுதூர்.

ஏரி,குளம்,ஊருணி ஒவ்வொன்று:
1.பாகனேரி, 2.கருங்குளம், 3.தாணிச்சாஊருணி

வயல்கள் ஐந்து:
1.புதுவயல்,2.சிராவயல்,3.ஆராவயல்,4.எ.சிறுவயல்,5.
ஒ.சிறுவயல்.

மங்கலம் மூன்று:
1.பட்டமங்கலம்,2.கொத்தமங்கலம்,3.காளையார்மங்கலம்.

வரம் ஒன்றே:
1.ராயவரம்.

ஆறு புரம்:
1.நாச்சியாபுரம்,2.நடராஜபுரம்,3.கே.லக்ஷ்மிபுரம்,
4.வி.லக்ஷ்மிபுரம்,5.ராமச்சந்திரபுரம்,6.சொக்கனாதபுரம்.

திங்கள் வகை ஒவ்வொன்று:
1.குழிபிறை,2.விராமதி,

சீர் புரிகள் நான்கு:
1.மேலைச்சிவபுரி,2.கோட்டையூர்அளகாபுரி, 3.கே.அளகாபுரி,
4.பி.அளகாபுரி.

பிற ஊர்கள் பத்து:
1.செட்டிநாடு,2.கானாடுகாத்தான்,3.கண்டரமாணிக்கம்,
4.கல்லல்,5.கோனாபட்டு,6.மானகிரி,7.நெற்குப்பை,
8.ராங்கியம்,9.அரிமளம்,10.சக்கந்தி.

சிலை,குறிச்சி ஒன்றோடு:
1.விரயாச்சிலை,2.பூலாங்குறிச்சி.

வியாழன், பிப்ரவரி 03, 2011

செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தை பற்றிய வெண்பா.

கோட்டையிலே மூன்று
குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தாகும்-
நாட்டமிகும் ஊர் பத்தாம்
ஏரி, குளம், ஊருணி ஒவ்வொன்றாம்
சேர் வயல்கள் ஐந்தென்று செப்பு.

மங்கலம் மூன்று,வரம் ஒன்றே
ஆறுபுரம்,திங்கள் வகை ஒவ்வொன்று
சீர் புரிகள் நான்கு,பிற ஊர்கள் பத்து
சிலை குறிச்சி ஒன்றோ(டு)
அரம் வளர்ப்பார் ஊர் எழுபத்தைந்து!.