சனி, மார்ச் 12, 2011

கனிமொழி..


முன்பு ஒரேயொரு தடவை நான் பார்த்து அச..ந்து
(அசந்துன்னா களச்சு)போன ஒரு படம் பத்தி விமர்சனம் 
எழுதினேன்,எனக்கு சினிமா விமர்சனமெல்லாம் எழுதி 
பழக்கமில்லை.அதுக்கப்புறமா இப்போதுதான்..

உண்மையில அசத்தல் படம்!கனிமொழிபடத்தை
பத்தி  சொல்லணும்னா..ஒருத்தன் ஒரு பொண்ண 
விரட்டி விரட்டி காதலிக்கிறான்..கூட நண்பர்கள்.. 
கடைசியில....(ம்ஹூம் அதை சொல்லிட்டன்னா
அப்புறமா இப்படி கதையை சொல்லிட்டா எப்படி
ன்னு கோச்சுக்குவீங்கல்ல..) சே..எல்லா படத்து
லயும் இதத்தானே சொல்றாங்க இதுல என்ன
அசத்தல்ன்னு கேக்குறீங்க... கேக்குது..கேக்குது :)

அதை எடுத்து...முடிச்சிருக்கிறவிதம் இருக்கே..
ப்ரமாதம்! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் ரசித்து
அனுபவித்ததை எல்லோரும் அனுபவிக்கவேண்டும்
என்ற ஆர்வம்தான் இந்த பகிர்தல் அவ்வளவுதான்!   

கதையாகட்டும்,அதன் உடே ஓடும் நகைச்சுவை
யாகட்டும்!கதாபாத்திரங்களாகட்டும்,கதை நடக்கிற 
களமாகட்டும் எல்லாம் அசத்தல்!சும்மா அலட்டிக்காம
அனாயசமான அருமையான படம் எடுத்துருக்காங்க!



இந்தப்படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசுவாமி என்பவர் 
அவருக்கு என் வாழ்த்துகள்!

(ஏன் இந்த படத்தை பத்தி யாருமே சொல்லலை!!)

முக்கியமா ஒண்ணு... 

இந்த கனிமொழியப்பற்றித்தான் சொல்ல வந்தேன் 
நீங்களா ஏதாச்சும் நெனைச்சு வந்தா அதுக்கு நான் 
பொறுப்பில்லைJ)

(எல்லோரும் பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம்
பேசுறாங்க…என்னவோ எனக்கு தெரிந்தது.. :))

செவ்வாய், மார்ச் 01, 2011

ஸ்வர்ணலிங்கேஸ்வரர்!


                     திருச்சிற்றம்பலம்.


காசியில் நகரத்தார் சத்திரத்தில் ஒவ்வொரு
வருடமும் தீபாவளியன்று ஸ்வர்ணநாயகி
விசாலாட்சி மட்டுமே கொலுவிருந்து பக்தர்களுக்கு
காட்சி தந்த அம்பிகையின் பக்கத்தில் ஸ்வர்ண
லிங்கேஸ்வரரும் இருந்தால் எத்தனை அழகு!
என நினைத்த அடியாரின் எண்ணம் இன்று
நகரத்தார்களின் ஒத்துழைப்பினால் ஈடேற
அருள்  புரிந்த அழகு நாயகனின் அற்புத தரிசனம்!



வைரப் பிறை,வைர விபூதிபட்டையுடன் 3 ½ கிலோ
தங்கத்தில் செய்த சிவலிங்கம் காசி நகரவிடுதிக்கு
கொண்டு செல்லும் முன் பிள்ளையார்பட்டி உள்ளிட்ட
ஒன்பது நகரத்தார் கோவில்களுக்கும் சென்று பின்
எழுபத்தைந்து நகரத்தார்களின் ஊர்களுக்கும் எடுத்து
சென்று பிறகு(23)சென்னையில் திருவெற்றியூர் சென்று
நகரத்தார் சத்திரத்தில் வைத்து(சென்ற இடமெல்லாம் 
பொதுமக்கள் காண)அபிஷேக ஆராதனைகள் செய்து 
கோலாகலமாக பிப்ரவரி 26 (2011) திகதி டெல்லிக்கு
சென்று காசி நகரத்தார் சத்திரத்தில் சிவராத்திரியன்று 
ஸ்வர்ணாம்பிகையின் அருகில் ஸ்வர்ணலிங்கேஸ்வரர் 
பிரதிஷ்டை செய்யப்பட்டு அடியார்களுக்கு அருட்காட்சி
தருவார்.
                                             
                     திருச்சிற்றம்பலம்