இருந்தவரெல்லாம் இல்லாதவராகிப்போக
இருப்பவரெல்லாம் இயலாதவராகிப்போனார்!
ஒன்றுக்கும் உதவாத எழுத்துக்கள்
வெளிவந்து என்ன சாதிக்கப்போகிறது
உள்ளுக்குள்ளேயே மரித்துப்போகட்டும்
சபிக்கப்பட்டதின் இறுதி விமோசனம்!
கால மாற்றத்தின் பிரிதொரு ஜன்மத்தில்
உணர்வுகள் மேலெழுந்து உயிர்பெற்றெழ
உலகுக்கு சொல்லும் உன்னத செய்தியாக
தன்னைத்தானே முன்னிருத்தி "வாழ்க"என்றது!