திங்கள், ஆகஸ்ட் 01, 2011

நிவேதா


அழகாக சிறு குழந்தைகளும் புரிந்துகொள்கிறார் போல
அருமையாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள்
ஏற்பாட்டாளர்கள்!.

மேடையில் வண்ணமயமாக அடுத்தடுத்து ஒவ்வொரு காட்சிகளும் அதற்கேற்ற பாடலுடன் அரங்கேற…


இந்த 27 அன்று மூன்று வயது ஆகப்போகும் நிவேதா
மிகவும் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தவள்
உற்சாகத்தோடு…

’அம்மா… பிள்ளையாரம்மா!’

’அம்மா ஹனுமான்!’

அடுத்து வந்த முருகரை தெரியவில்லை(!) ம்..ம்..
என அவள் யோசிக்க..

’இது முருகாசாமி.. நிவேதா..’

’ம்..ம்..முருகா சாமி….’ என ஆமோத்தித்தாள்

’ஹேய்..! அம்மா..அம்மா…கிருஷ்ணா!’

அத்துடன் கடவுள்களின் அணிவகுப்பு முடிந்து அடுத்து அரங்கேறிய காட்சியை பார்த்தவள் அம்மாவை திரும்பி பார்த்துக்கொண்டே கேட்டாள்…

’அம்மா எங்கே பிரம்மா?’

தூக்கிவாரிப்போட்டது!