சனி, டிசம்பர் 28, 2019

2020 ம் வருடத்திற்கான முக்கிய பண்டிகைகளின் அட்டவனை

🙏✨அனைவருக்கும் அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!✨🙏



2020 ம் ஆண்டில் வரும் இந்துக்களின் பண்டிகை மற்றும் விஷேசமான நாட்களின் அட்டவணை..

ஜனவரி 2020

06 திங்கள் வைகுண்ட ஏகாதசி
10 வெள்ளி ஆருத்ரா தரிசனம்
14 செவ்வாய் போகி பண்டிகை
15 புதன் பொங்கல்
16 வியாழன் மாட்டுப் பொங்கல்
24 வெள்ளி தை அமாவாசை

பிப்ரவரி 2020

01 சனி ரத சப்தமி
08 சனி தைப்பூசம்
21 வெள்ளி சிவராத்திரி


மார்ச் 2020

08 ஞாயிறு மாசி மகம்
14 சனி காரடையான் நோன்பு
25 புதன் தெலுங்கு புத்தாண்டு

ஏப்ரல் 2020

02 வியாழன் இராம நவமி
07 செவ்வாய் பங்குனி உத்திரம்
14 செவ்வாய் புத்தாண்டு, விஷூ
26 ஞாயிறு அட்சய திருதியை
28 செவ்வாய் சங்கரர் ஜெயந்தி, ராமானுஜ ஜெயந்தி


மே 2020

04 திங்கள் அக்னி நக்ஷத்ரம் தொடங்கு
07 வியாழன் சித்ரா பௌர்ணமி
28 வியாழன் அக்னி நக்ஷத்ரம் முனைகள்

ஜூன் 2020

04 வியாழன் வைகாசி விசாகம்


ஜூலை 2020

20 திங்கள் ஆடி அமாவாசை
24 வெள்ளி ஆண்டாள் ஜெயந்தி
25 சனி கருட பஞ்சமி
26 ஞாயிறு ஆவணி அவிட்டம் *இருக்கு வேதம்
31 வெள்ளி வரலட்சுமி நோன்பு

ஆகஸ்ட் 2020

02 ஞாயிறு ஆடிப்பெருக்கு
03 திங்கள் ஆவணி அவிட்டம் *யசுர் வேதம்
04 செவ்வாய் காயத்ரி ஜெபம்
07 வெள்ளி மகா சங்கடஹர சதுர்த்தித்
11 செவ்வாய் கோகுலாஷ்டமி
12 புதன் கோகுலாஷ்டமி
22 சனி சாம வேதம் உபாகர்மா, விநாயகர் சதுர்த்தி
31 திங்கள் ஓணம்


செப்டம்பர் 2020

07 திங்கள் மஹா பரணி
10 வியாழன் அஷ்டமி ரோகினி
15 செவ்வாய் மக்ஹா ஸ்ராத்த
17 வியாழன் மகாளய அமாவாசை

அக்டோபர் 2020

17 சனி நவராத்திரி
25 ஞாயிறு ஆயுத பூஜை, சரசுவதி பூஜை, விஜயதசமி
26 திங்கள் வித்யாரம்பம்


நவம்பர் 2020

14 சனி தீபாவளி, லக்ஷ்மி பூஜை, கேதார கெளரி விரதம்
20 வெள்ளி சூரசம்ஹாரம்
29 ஞாயிறு கார்த்திகை தீபம்

 டிசம்பர் 2020

19 சனி சுப்பிரமணிய சஷ்டி
25 வெள்ளி வைகுண்ட ஏகாதசி
30 புதன் ஆருத்ரா தரிசனம்....

         - சித்தர்களின் குரல்

திங்கள், நவம்பர் 28, 2016

எழுத்து!


இருந்தவரெல்லாம் இல்லாதவராகிப்போக
இருப்பவரெல்லாம் இயலாதவராகிப்போனார்!
ஒன்றுக்கும் உதவாத எழுத்துக்கள்
வெளிவந்து என்ன சாதிக்கப்போகிறது
உள்ளுக்குள்ளேயே மரித்துப்போகட்டும்
சபிக்கப்பட்டதின் இறுதி விமோசனம்!
கால மாற்றத்தின் பிரிதொரு ஜன்மத்தில்
உணர்வுகள் மேலெழுந்து உயிர்பெற்றெழ
உலகுக்கு சொல்லும் உன்னத செய்தியாக
தன்னைத்தானே முன்னிருத்தி "வாழ்க"என்றது!

வியாழன், ஜனவரி 07, 2016

ஶ்ரீ ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகளின் அருள் உரை..


நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை!!
-----------------------------------------------------
உலகில் உள்ள அனைவருக்கும் எதோ ஒரு கடமை இருக்கும்.எதோ ஒரு பொறுப்பும் இருக்கும்.

அது அவர்களது அறியாமையை தவிர வேறில்லை.

எது உங்களது கட்டுப்பாட்டில் உள்ளது சற்றே சிந்தியுங்கள்.

உங்கள் உடலே உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையே. 

உங்கள் உடம்பே உங்கள் பேச்சை கேட்காதபோது உலகில் வேறு யார் கேட்பார்?

உடலை விடுங்கள். 

உங்கள் தலைமுடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிருவதும், வழுக்கை விழுவதும் யாருக்கத்தான் பிடிக்கும்?

ஆனால் முடி நரைப்பதயோ உதிருவதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!!

உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு? 

தெரியாது.

உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்? 

அதுவாக ஜீரணம் ஆகிறது.

இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?

இல்லையே.

இப்படி உங்களுக்கு சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப்பாட்டிலும்,
உங்களது பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலதையும் உங்கள் பொறுப்பு
என்று நீங்கள் சிந்திப்பது எவ்வளவு அறியாமை.

மழை உங்களைக்கேட்டா வானிலிருந்து பொழிகிறது?

மரம் உங்களைக்கேட்டா முளைகிறது?

உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது?

நக்ஷத்திரங்கள் உங்களின் பொறுப்பிலா ஜொலிக்கிறது?

நீங்கள்தான் வானில் உள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப்பிடிப்பவரோ??

உங்கள் பொறுப்புணர்ச்சியும் கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை?
எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை. எதற்கும் நீங்கள் பொறுப்பும் இல்லை.
அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக்கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை.அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குயறதோ அது அனைத்தையுமே பார்த்துக்கொள்ளும். 

உங்களுக்கு ஏன் வீண் கவலை?
எதுவும் உங்கள் கையில் இல்லை. அமைதியாய் இருங்கள்!!!
நாராயணா
நாராயணா...​

வியாழன், ஜூன் 11, 2015

பூக்கள்!


வண்ண வண்ணமாக
வகை வகையாக!
பார்க்க அலுக்காத
பட்டுப்பூக்கள்!
அசத்தும் அழகு
ஆர்கிட் மலர்களின் அணிவகுப்பு!

சனி, மே 12, 2012

அன்னையர் தின நல் வாழ்த்துகள்!

அன்பில் திளைத்து ஆனந்தம் பெருக
இனிய வாழ்த்துகள்!

என் தோட்டத்து மலர்கள்!

அழகிய ஆர்கிட்!

வியாழன், டிசம்பர் 08, 2011

இனிய கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்!



முதல்வருக்கு மரியாதை
                                                              


வியாழன், செப்டம்பர் 22, 2011

ஸ்ரீமத் பாகவதம்!


தன் கம்பீரமான குரலில் சொல்ல சொல்ல ஒவ்வொரு
வார்த்தைகளும் நம் மனதில் அப்படியே ஜம்மென்று ஏறி
அமர்ந்துகொள்கிறது! நம்மையறியாமல்கவனம் சிதறாமல்
உபன்யாசத்தையே கேட்கவைப்பது எது?அவரின் கம்பீரமான
குரலா?மிகத்தெளிவான உச்சரிப்பா?அவரிடம் உள்ள
தெய்வீகத்தன்மையா எது?இவையெல்லாமுமா?
ஸ்ரீமத் பாகவதம் கேட்பவர்களை கட்டிப்போட்டுவிடுகிறார்
வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள்!

எல்லோரும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கவேண்டும்
என்ற ஆர்வத்தில் இதைஎடுத்து வந்தேன்.இது முதல்பகுதி
YouTube ல் அடுத்தடுத்த பகுதிகள் வரிசையாக உள்ளது 
அவசியம் கேட்கவேண்டும் மனதிற்கு இதமாக இருக்கும்.

ஸ்ரீமத் பாகவதம் கேட்பதே தவம்!.


http://www.youtube.com/watch?v=UixNktiVqG0&feature=share





திங்கள், ஆகஸ்ட் 01, 2011

நிவேதா


அழகாக சிறு குழந்தைகளும் புரிந்துகொள்கிறார் போல
அருமையாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள்
ஏற்பாட்டாளர்கள்!.

மேடையில் வண்ணமயமாக அடுத்தடுத்து ஒவ்வொரு காட்சிகளும் அதற்கேற்ற பாடலுடன் அரங்கேற…


இந்த 27 அன்று மூன்று வயது ஆகப்போகும் நிவேதா
மிகவும் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தவள்
உற்சாகத்தோடு…

’அம்மா… பிள்ளையாரம்மா!’

’அம்மா ஹனுமான்!’

அடுத்து வந்த முருகரை தெரியவில்லை(!) ம்..ம்..
என அவள் யோசிக்க..

’இது முருகாசாமி.. நிவேதா..’

’ம்..ம்..முருகா சாமி….’ என ஆமோத்தித்தாள்

’ஹேய்..! அம்மா..அம்மா…கிருஷ்ணா!’

அத்துடன் கடவுள்களின் அணிவகுப்பு முடிந்து அடுத்து அரங்கேறிய காட்சியை பார்த்தவள் அம்மாவை திரும்பி பார்த்துக்கொண்டே கேட்டாள்…

’அம்மா எங்கே பிரம்மா?’

தூக்கிவாரிப்போட்டது!


ஞாயிறு, மே 08, 2011

அன்னையர் தின நல் வாழ்த்துகள்!


அன்னையர் அனைவருக்கும் அன்பான நல் வாழ்த்துகள்!

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள். மழலை சொல்...


இந்த பெரிய மனிதர்கள் இருவரும்பேசிக்கொள்வதை....
கேட்டுகிட்டே இருக்கலாம் போல.. !! :)

சனி, மார்ச் 12, 2011

கனிமொழி..


முன்பு ஒரேயொரு தடவை நான் பார்த்து அச..ந்து
(அசந்துன்னா களச்சு)போன ஒரு படம் பத்தி விமர்சனம் 
எழுதினேன்,எனக்கு சினிமா விமர்சனமெல்லாம் எழுதி 
பழக்கமில்லை.அதுக்கப்புறமா இப்போதுதான்..

உண்மையில அசத்தல் படம்!கனிமொழிபடத்தை
பத்தி  சொல்லணும்னா..ஒருத்தன் ஒரு பொண்ண 
விரட்டி விரட்டி காதலிக்கிறான்..கூட நண்பர்கள்.. 
கடைசியில....(ம்ஹூம் அதை சொல்லிட்டன்னா
அப்புறமா இப்படி கதையை சொல்லிட்டா எப்படி
ன்னு கோச்சுக்குவீங்கல்ல..) சே..எல்லா படத்து
லயும் இதத்தானே சொல்றாங்க இதுல என்ன
அசத்தல்ன்னு கேக்குறீங்க... கேக்குது..கேக்குது :)

அதை எடுத்து...முடிச்சிருக்கிறவிதம் இருக்கே..
ப்ரமாதம்! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் ரசித்து
அனுபவித்ததை எல்லோரும் அனுபவிக்கவேண்டும்
என்ற ஆர்வம்தான் இந்த பகிர்தல் அவ்வளவுதான்!   

கதையாகட்டும்,அதன் உடே ஓடும் நகைச்சுவை
யாகட்டும்!கதாபாத்திரங்களாகட்டும்,கதை நடக்கிற 
களமாகட்டும் எல்லாம் அசத்தல்!சும்மா அலட்டிக்காம
அனாயசமான அருமையான படம் எடுத்துருக்காங்க!



இந்தப்படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசுவாமி என்பவர் 
அவருக்கு என் வாழ்த்துகள்!

(ஏன் இந்த படத்தை பத்தி யாருமே சொல்லலை!!)

முக்கியமா ஒண்ணு... 

இந்த கனிமொழியப்பற்றித்தான் சொல்ல வந்தேன் 
நீங்களா ஏதாச்சும் நெனைச்சு வந்தா அதுக்கு நான் 
பொறுப்பில்லைJ)

(எல்லோரும் பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம்
பேசுறாங்க…என்னவோ எனக்கு தெரிந்தது.. :))

செவ்வாய், மார்ச் 01, 2011

ஸ்வர்ணலிங்கேஸ்வரர்!


                     திருச்சிற்றம்பலம்.


காசியில் நகரத்தார் சத்திரத்தில் ஒவ்வொரு
வருடமும் தீபாவளியன்று ஸ்வர்ணநாயகி
விசாலாட்சி மட்டுமே கொலுவிருந்து பக்தர்களுக்கு
காட்சி தந்த அம்பிகையின் பக்கத்தில் ஸ்வர்ண
லிங்கேஸ்வரரும் இருந்தால் எத்தனை அழகு!
என நினைத்த அடியாரின் எண்ணம் இன்று
நகரத்தார்களின் ஒத்துழைப்பினால் ஈடேற
அருள்  புரிந்த அழகு நாயகனின் அற்புத தரிசனம்!



வைரப் பிறை,வைர விபூதிபட்டையுடன் 3 ½ கிலோ
தங்கத்தில் செய்த சிவலிங்கம் காசி நகரவிடுதிக்கு
கொண்டு செல்லும் முன் பிள்ளையார்பட்டி உள்ளிட்ட
ஒன்பது நகரத்தார் கோவில்களுக்கும் சென்று பின்
எழுபத்தைந்து நகரத்தார்களின் ஊர்களுக்கும் எடுத்து
சென்று பிறகு(23)சென்னையில் திருவெற்றியூர் சென்று
நகரத்தார் சத்திரத்தில் வைத்து(சென்ற இடமெல்லாம் 
பொதுமக்கள் காண)அபிஷேக ஆராதனைகள் செய்து 
கோலாகலமாக பிப்ரவரி 26 (2011) திகதி டெல்லிக்கு
சென்று காசி நகரத்தார் சத்திரத்தில் சிவராத்திரியன்று 
ஸ்வர்ணாம்பிகையின் அருகில் ஸ்வர்ணலிங்கேஸ்வரர் 
பிரதிஷ்டை செய்யப்பட்டு அடியார்களுக்கு அருட்காட்சி
தருவார்.
                                             
                     திருச்சிற்றம்பலம்