செவ்வாய், மார்ச் 11, 2008

இந்த விருது எதிர்பாராதது!

நான் எழுதிய‌'யாத்தி'என்ற சிறுகதை ஜனவரி 2008 'யுகமாயினி'என்ற மாத இதழில் பிரசுரம் ஆனது,இந்தச்சிறுகதை'இலக்கியச் சிந்தனை'அமைப்பால் அந்த மாதத்தின் சிறந்தசிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

(சிங்கப்பூரின் சிறந்த எழுத்தாளர்)தோழி ஜெயந்திசங்கர் கேட்டுக்கொண்டதற்கிணங்க யாத்தி கதையை சென்னையில் இருந்து வெளியாகும் 'யுகமாயினி' மாத இதழுக்காக அனுப்பி வைத்திருந்தேன்।

இந்தியாவின் இலக்கிய சிந்தனைக்கான இந்த விருது ஏற்கனவே இரண்டு முறை மலேசியாவிற்கு கிடைத்திருக்கிறது.1970ல் மலேசிய நாட்டின் சிறந்த எழுத்தாளர்களான் திரு சி.முத்துசாமி அவர்களுக்கும்,சில வருடங்கள் முன் திருரே.காஅவர்களுக்கும்,மூன்றாவதாக தற்பொழுது என் கதைக்கும்!

எழுத்துலகில் எவ்வளோவோ சிறந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையில் என் எழுத்திற்கு இப்படியொரு பரிசு!இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை!

யாத்தி கதையை தேர்ந்தெடுத்த இலக்கிய சிந்தனை அமைப்பிற்கும்,திரு சித்தன் அவர்களுக்கும் என்றும் என் நன்றி.

-மீனா

6 கருத்துகள்:

+Ve Anthony Muthu சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
+Ve Anthony Muthu சொன்னது…

My God..!
A Great spelling mistake.
It should be "Thanks for your Comment". I feel so sorry Madam.

Gnaniyar @ நிலவு நண்பன் சொன்னது…

வாழ்த்துக்கள் மீனா...

meenamuthu சொன்னது…

பரவாயில்லை அந்தோனிமுத்து எதற்கு மன்னிப்பெல்லாம் கேட்டுக்கொண்டு? :)

தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது ரசிகவ் நன்றி.

அரவிந்தன் சொன்னது…

வணக்கம் மீனா...

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

Tech Shankar சொன்னது…

Congrats..