சனி, மே 08, 2010

அனைவருக்கும் அன்னையானவள் !

அன்னையர் அனைவருக்கும்  அன்பான வாழ்த்துகள்!

குழுமத்தில் நண்பர் தமிழ்த்தேனி அவர்கள் இட்ட இந்த
பாடல் வெகுவாக கவர்ந்தது.  அன்னையர் தினத்தின்
நினைவாக அதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.


கற்பெனும் தரத்தை கண்ணியமாய்க் காத்து
அப்பனின் விந்தை  யற்புதப் பந்தில்
வாங்கித்  தாங்கி கருவாக்கி  உருவாக்கி
இடிபோன்ற  வலிதாங்கி இடைவழியே
வெளிவாங்கி கனக முலைவழியே
உதிரத்தைப் பாலாக்கி அன்போடு
அரவணைத்தூட்டி   கைகால் முளைக்க
வைத் தறிவும் ஆயுளும் அணுக்குள்
நுணுக்கி   அற்புதமாய் காத்து
அப்பனையும் அடையாளம் காட்டிய
அற்புதப் படைப்பாளி  அம்மா!
அம்மா  என்றால்  அம்மா

-தமிழ்த்தேனீ





கருத்துகள் இல்லை: