வியாழன், மே 13, 2010

ஒரு வழி சொல்லுங்களேன்

ரொம்ப நாளாய் பாடாய் படுத்தற விஷயம். 
கொஞ்சநேரம் சமையல் கட்டைவிட்டு வந்தால் 
போதும் உடனே ஃப்ரிஜுக்கு கீழிருந்தோ அல்லது 
ஏதாவது இடுக்கிலிருந்தோ சத்தமில்லாமல் 
வந்து சட்டென்று சாப்பாட்டு மேஜையின் 
மேல் ஏறி உலா வர ஆரம்பிக்கும். நாம் வருவது 
எப்படித்தான் தெரியுமோ நாம் ஒரு காலை உள் 
வைக்கும்போதே கண்டுகொண்டு மேஜைக்கு 
கீழே எங்காவது நழுவி அப்படியே பதுங்கிக்
கொள்ளும் அப்போத்தானே மறுபடி நாம் 
நகர்ந்தால் சட்டென்று வெளிவந்து (எதிலடா 
வாய் வைக்கலாம்னு)விட்டஇடத்தில் இருந்து 
தொடர முடியும்.

அப்படி உலாவரும்போது தப்பித்தவறி நம் கண்களில்  
பட்டாலோ வெறுக்கென்று நம் உடலில் ஒரு உணர்வு 
தோன்றுமே அய்யே.. அவ்வளவுதான் அதுக்கப்புறம்  
மேஜை மேலிருக்கும் அத்தனை பண்டங்கள்மேலும்
(மூடி இருந்தால்கூட)சந்தேகம் வர ஆரம்பிக்கும் இதில்  
ஏறி இருக்குமோ அதில் வாய் வைத்திருக்குமோ என்று 
எதைப்பார்த்தாலும் அருவருப்பு.

சரி பாவம் சாப்பாடு கிடைக்காமல்த் தானே இப்படி  
அலையுதுகள் அதனாலே நாமே வேளா வேளைக்கு  
சாப்பாடு போட்டுட்டா அப்புறம் இந்த தொந்தரவு  
இல்லை அதுக பாட்டுக்கு சாப்பிட்டுட்டு தொந்தரவு 
செய்யாமலாவது இருக்கும் என்றுஅதுங்க பதுங்கற  
இடமா பாத்து பாத்து சோறு அல்லது தோசை இனிப்பு  
எல்லாம் நம்ம சாப்பிடறதை போடணும் அதுகளுக்கு  
தெரியும் இல்லாட்டினா மறுபடி நம்மோட பங்குபோட 
மறுபடி மேஜை மேல ஏறிரும்ல(எல்லாம் ஒரு
நினைப்புத்தான்:) என்று வகை வகையா போட்டா 
அதை மோந்து கூட பாக்காது பழையபடி மேஜைதான்! 
அங்கே போட்ட சாப்பாடு காஞ்சுபோய். கிடக்கும் ம்ம்..

இதுல இன்னோரு கஷ்டம் நாம நடக்கும் போது  
கால்களுக்கு இடையில் குறுக்கும் நெடுக்கும் ஓடி  
அதும்மேல மிதிக்காம இருக்க நாம் இ..இ.. ஈ..ஏ..இ.. 
ன்னு(வினோதமான சத்தங்களுடன்)  பரதநாட்டியம் 
வேற கத்து வச்சுக்கனூம்.

இந்த பல்லியை(அதுக்கு எந்த தொந்தரவும் செய்யாம) 
விரட்டறதுக்கு என்னதான் வழி? தயவு செய்து 
யாராவது சொல்லுங்களேன்.






கருத்துகள் இல்லை: