வியாழன், செப்டம்பர் 09, 2010

அப்பச்சி... 4

ரூம் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஆத்தாயாரோ கூப்பிடுகிறாங்க கதவத் தெறக்கவா..கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஆத்தாவே வந்து கதவைத் திறக்க வெளியில.. ஆத்தாவோடசொந்தக்காரர் (கப்பலில் உள்ள மேலும் இரு அதிகாரிகளுடன்) நின்று கொண்டிருந்தார்...!


'வாங்க ஆச்சி வாங்க நல்லாயிருக்கியளா?' என்றவரை 'வாங்க தம்பி என்ன நீங்க...இங்கே!? ஆத்தாவுக்கு ஒண்ணும் புரியலை கப்பல் இன்னமும் கரைக்கு போகலை அதுக்குள்ள அவர் எப்படி இங்கு வந்தார் என்று, ஒங்களை கூட்டி போறதுக்கு வந்தேன் , அண்ணே கூட்டிட்டு வரச்சொன்னாக சீக்கிரம் பாஸ்போட்டை எடுத்துக்கிட்டு வாங்காச்சி இவங்களோட போகணும்' என்றார்.

ஆத்தாவும் ஒண்ணுமே பேசாம பாஸ்போட்டை எடுத்துக் கொண்டு என்னையும் கூட்டிக் கொண்டு போனா...ல்! அங்க அந்த காலை நேரத்திலயே ரெம்பப்பேரு ரெடியாகி அங்க வந்துட்டாங்க! அவ்வ்வ்வளவு பெரிய க்யூ! எல்லாரும் வரிசையில் நின்னுகிட்டு இருந்தாங்க. இன்னும் சோதனை ஆரம்பிக்கலை. இமிகிரேஷன் ஆபிஸர்கள் ஏழெட்டுப் பேரு அங்குள்ள ஹாலில் உக்காந்திருந்தாங்க, எங்கள கூட்டிகிட்டு போனவர் அங்கேருந்த ஆபிஸர் ஒருத்தர்ட்ட கூட்டிபோய் ஆத்தாகிட்ட பாஸ்போட்டை வாங்கி அவருகிட்ட கொடுத்துகிட்டே என்னமோ சொன்னார்.

அவர் எல்லாத்தயும் சரி பாத்து முடித்து கொடுக்கிறதுக்கு கொஞ்ச நேரமாகிருச்சு. அங்கே காத்திருந்தவங்க எல்லாரும் எங்களையே அதிசயமா பாத்து கிட்டுருக்க, எனக்கோ நேத்து ஆத்தா சொன்னாங்க வரிசையில் காத்திருக்கணும்னு, ஆனா மத்தவங்களெல்லாம் காத்திருக்கறாங்க நம்மளை மட்டும் மொதல்ல கூட்டிட்டு போய் பாக்கிறாங்களே எப்படின்னு யோசனையா இருந்துச்சு.. ஆத்தாவையும் கேக்க முடியலை ஆனா ரெம்ப சந்தோசமா இருந்துச்சு, நமக்குத்தான் மொதல்ல பாக்குறாங்க மத்தவங்க மாதிரி  எங்களையும் வரிசையில் நிக்கச்சொல்லலை அப்படின்னு!

சோதனை முடிஞ்சதும் எங்களை கூட்டிக்கிட்டு மறுபடி எங்க ரூமுக்கு வந்து எங்க பொருள்களை எல்லாம் எடுத்துக்கிட்டு ஏதோ ஒரு தளத்திற்கு  எங்களை கூட்டிகிட்டு போனாங்க.அங்க எங்களை அழைச்சுகிட்டு போக போட் ஒண்ணு தயாரா இருந்துச்சு!,அந்த தளத்தில இருந்து(ஏணி மாதிரியே)கயிறில்(நடுவில் பலகைவைத்த)செஞ்சபடி ஒன்னு கப்பலோட சேத்து கட்டி தொங்கிகிட்டு இருந்துச்சு! அதில எறங்கித்தான் படகுக்குள்ள வரணும். அதுவோ ஆடிக்கிட்டே இருந்துச்சு.

ஒருத்தர் என்னப்பிடிச்சிகிட்டு என்கூடவே வந்து நான் எறங்க உதவி செஞ்சாரு ஆனாலும் அதுல காலவச்சு எறங்குறதுக்குள்ள தண்ணிக்குள்ளதான் விழுகபோறம்னு ரொம் ..ப ரொம்..ப பயந்து போய்ட்டேன். அப்பாடி!! ஆத்தாவும் அதுல எறங்க கஷ்டப்பட்ட மாதிரி இருந்திச்சு..படகில ஏறி உக்காந்ததுக்கு அப்பறம்தான் எனக்கு ஆத்தாகிட்டே பேச முடிஞ்சுச்சு,ஆனா அதுகுள்ள ஆத்தா அந்த அண்ணங்கிட்டே பத்தாவது தடவையாஎத்தனை தடவைன்னு தெரியலை 'அண்ணே ஏன் வரலை? ஏ..(ன்) இவ்வளவு அவசரமா முக்கியமா எங்களை மட்டும் கூட்டிபோறிய சொல்லப்பச்சி?ன்னு கப்பல்ல கேட்டதையே மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கிட்டு இருந்தாங்க.. (ஆத்தாவின் கேள்விக்கு) அந்த அண்ணன் கர்சிஃபை எடுத்து முகத்தை துடைச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே என்னமோ சொல்லிக் கிட்டுருந்தாங்க, நான் அடுத்த அதிசயத்தில மூழ்கி போயிட்டேன்!.

'அட இந்த போட் என்ன வேகமா போகுது ரெண்டு பக்கமும் தண்ணியைத் தள்ளிகிட்டு..! அது வள..ஞ்சு திரும்பி போகும் போது ஒரு பக்கம் சந்தோசமா (குதூகலமா) இருந்தாலும் அவ்வளவு பக்கத்தில தண்ணியை பாக்கும் போது வழக்கம் போல மனசுக்குள்ள பயத்தோட பார்த்துக்கிட்டிருந்தேன் தூரத்தில கரை தெரிஞ்சுச்சு! இன்னும் கொஞ்ச நேரத்தில அங்க போயிருவோம் அப்பச்சி அங்கே எங்களுக்காக காத்துகிட்டுருப்பாங்களோ ?



கருத்துகள் இல்லை: