சனி, பிப்ரவரி 18, 2006

தைப்பூசம்

சென்ற சனிக்கிழமையன்று (பிப்ரவரி 11) பினாங்கு தைப்பூசத்திற்கு சென்று வந்தேன் அதன் நினைவாக...

(சென்ற வருடம் 'மின்சுவடி'யில் எழுதியது)


தைப்பூசம் என்றவுடன் தண்ணீர்மலை முருகனின் முறுவலிக்கும் முத்தான முகம் மனதில்!தமிழ் மக்கள் மட்டும் இன்றி சீனர்களும் சேர்ந்து வணங்கும் கடவுள். அவன்மேல் முழு நம்பிக்கை வைத்து வணங்கி வழிபடுகிறார்கள். அவனும் அவர்கள் கேட்பதெல்லாம் உடனுக்குடன் வழங்கி திக்கு முக்காட வைக்கிறான்.

அவர்களும்தான் ஒவ்வொரு வருடமும் அன்னதானத்திற்கு மூட்டை மூட்டையாய் அரிசி, காய்கறிகள், பழங்கள், அவன் பவனிவரும் பாதையெல்லாம் (கொளுத்தும் வெயிலில் காத்திருந்து) கோபுரம்போல் குவித்த ஆயிரக்கணக்கான தேங்காய்கள் என (உடைத்து) தங்களின் அன்பைப் பொழிந்து அவனை மலைக்க வைத்து விடுகிறார்கள்.ஐயாயிரம், பத்தாயிரம் என்று அவன் ஊர்வலம் செல்லும் சாலை நெடுக குவியல் குவியலாய் எங்கு பார்த்தாலும் தேங்காய்கள்! அதன் மேல் கட்டுக் கட்டாய் ஊதுபத்திகள்! சாலையெங்கும் ஆறாக ஓடும் தேங்காய்த் தண்ணீர்!.

பினாங்கில் தைப்பூசத் திருவிழாவின் முதல்நாளை 'செட்டி(நகரத்தார்)பூசம்'எனச் சொல்வார்கள். பூசத்திற்கு இரண்டு நாள் முன் பினாங்கு ஸ்தீரீட்டில் உள்ள கோவில்(கிட்டங்கி) வீட்டில் நகரத்தார்களின் மயில்காவடிகளுக்கும், முருகப் பெருமானுக்கும் பூசைகள் செய்து வணங்கி வழிபட்டு, அடுத்த நாள் (பூசத்திற்கு முதல் நாள்) கோவில் வீட்டில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நகரத்தார்களின் காவடிகள் முன் செல்ல வெள்ளிரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் புறப்படும்.

வழி நெடுகிலும் மக்கள் (ஏராளமான சீனர்களும்) அர்ச்சனைகள் செய்து முன் குறிப்பிட்டபடி பல்லாயிரக் கணக்கில் தேங்காய்கள் உடைக்க அங்கங்கே நின்று அவையெல்லாவற்றையும் அன்புடன் ஏற்று மெதுவாக வரும் ஊர்வலம் மதியம் 'காமாட்சியம்மன்' ஆலயம் வந்தடைந்து அன்னையின் ஆசி பெற்று அடுத்து, பக்கத்திலேயே எதிர்புறத்தில்'சிவன்' கோவில் வந்தடைந்து அய்யனின் ஆசியையும் பெற்று- அங்கு சிறிது நேரம் இளைப்பாற்றி மீண்டும் அங்கிருந்து தண்ணீர்மலைக்கோவிலை நோக்கி தன் ஊர்வலத்தை தொடருவார்!.

மதியம் ரதத்தின் கூடவே நடக்கும் பக்தர்களுக்கு (வெயிலில்) கால் சுடாமல் 'பினாங்கு நகராட்சி' சாலை நடுவே தண்ணீர் ஊற்றிக் கொண்டே செல்வது! (தேங்காய்த்தண்ணீரும் சேர்ந்து ஓடும்!) அந்த சூடுபறக்கும் சாலையில் காலணி அணியாமல் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் இதமாயிருக்கும்.ஊர்வலம் போகும் வழியெங்கும் தனியார் மற்றும், அரசாங்க நிறுவனங்களும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர், மோர், ஜூஸ், காப்பி, டீ உள்பட அன்னதான(மு)ம் வழங்குவதும், ஒவ்வொரு தண்ணீர்ப் பந்தல் வாசலிலும் சிறு சிறு செயற்கை நீரூற்றுகளும் அதன் மேல் விநாயகர், முருகர், அம்பாள், சிவன் என்று விதவிதமான தெய்வச் சிலைகளை வைத்தும்; சில தெய்வங்களுக்கு, பால் அபிஷேகம்! சாலையில் வண்ண வண்ணமாக, பெரிய பெரிய ரங்கோலியிட்டு!அன்று இரவு வெள்ளிரதம் தண்டாயுதபாணி கோவில் வந்தடைவதற்கு இரவு பத்தரை ஆகிவிடும்.



அதன்பின் சாமி இறக்கி ஆலயத்தின் உள்நடையில் நிறுத்தி பக்தர்கள்' இருவர் பாமரம்வீச பார்த்திருக்கும் அத்தனை பேரும் பரவசமடைய- பெரியவர் ஒருவர் கட்டியம் கூற (முருகனின்மேல் பாடுவார்) முருகன் கனிவோடு நின்று கேட்டிருக்க- பார்த்திருக்கும் அனைவருக்கும் அற்புதமான உணர்ச்சிகள் அலைமோத- தவறாது காணவேண்டும் இக்காட்சியை!. இரண்டாம் நாளான பூசத்தன்று காலையில் நான்கு மணியில் இருந்தே
காவடிகள் வர ஆரம்பிக்கும். பினாங்கு சிவன் கோவிலில் இருந்து பால்குடங்கள் புறப்பட்டு கால் நடையாக தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்து பால் குடங்களைî செலுத்துவார்கள்.நேரம் ஆக ஆக பால் குடங்கள், வித விதமான அழகான காவடிகளுடன் ஆடல் பாடலுடன் அவர்கள் வரும் அழகு!கோவில் கொள்ளாத கூட்டம்; கொண்டாட்டம்.அத்தனை பேரும் கீழே தண்டாயுதபாணியைத் தரிசித்து அதன் பிறகு எதிர்புறத் தில் மலைமேல் இருக்கும் பால தண்டாயுதபாணியை தரிசித்து செல்வர்.அன்று முருகப் பெருமானுக்கு மஹேஸ்வர பூஜை அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொருபுறம் குழந்தைகளுக்கு முடியிறக்கி தொட்டி கட்டுதல். (ஒரே சமயத்தில் ஐந்து ஆறு குழந்தைகளுக்கும் தொட்டில் கட்டுவார்கள்.) இரண்டு கரும்புகளை ஒன்றுசேர்த்து இரு புறமும் இருவர் பிடித்துக் கொள்ள பட்டுப் புடவைகளைக் கொண்டு அதில் தொட்டில் கட்டி (புடவையின் மேல் அழகாக பூச்சரங்கள் தொங்கவிட்டு) தொட்டிலுக்குள் குழந்தைகளைô படுக்கவைத்து சில குழந்தைகள் பலமாகì கத்தò துவங்க, சில குழந்தைகள் எந்தî சலனமும் இல்லாமல் சுகமாகò தூங்க அவரவர் சுற்றத்தார் சுற்றிலும் வர மேள தாளத்துடன் வரிசையாக  கரும்பு தொட்டில்கள் முருகனின் சன்னிதியைப்பிரகாரமாய் வந்து வேண்டுதலை நிறைவேற்று வார்கள். பகல் பன்னிரண்டு மணிக்கு ஆராதனையின் உச்சì கட்டமாக முருகனுக்கு தீபமாகி அதன் பின் அன்னத் திற்கும் (கோபுரம் போல் குவித்திருக்கும் சாதத்திற் கும்) மற்றும் சமைத்து வைத்திருக்கும் பாயசம், சாம்பார், ரசம், காய்கறிகள் வகைகளுக்கும் தீபம் காண்பிக்கும் போது (அன்னதீபம் பார்க்க வேண்டி அடங்காத கூட்டத்திற்குள் முண்டியடித்து) முன்வந்து நின்று அன்னதீபம் பார்ப்பதில் பரம திருப்தி!. இதற்கிடையில் பலர் மஹேஸ்வர பூஜை முடிந்து அன்னதீபம் காண்பிப்பதற்குள் மேல் கோவிலுக்குô போய்வந்து விடலாம் என்று கிளம்பி பால தண்டாயுதபாணியைò தரிசிக்கவென்று அங்கு செல்ல, அங்கேயும் அபிஷேகம் ஆரம்பிக்க (குடம் குடமாகô பால் அபிஷேகம்!) தரிசனம் காண வந்தவர்களில் சிலர் கீழே போய் அன்னதீபம் (மேலேயும் அன்னதீபம் அன்னதானம் உண்டு) பார்க்கவேண்டுமே என்பதையும் மறந்து அங்கேயே அமர்ந்து கண்கள்குளிரô பார்த்து அதன்பின் அவசர அவசரமாகச் செல்வர்; மற்றவர் மேலேயே அன்னதீபம் பார்த்துச் செல்வர்.அன்னதீபம் காட்டியபிறகுதான் சாப்பாடு. கோவிலுக்குள்(சொக்கட்டான் வடிவத்தில் அமைந்துள்ள
இடத்தில்) நாலாபுறமும் இலை போட்டுவந்திருக்கும் அவ்வளவு கூட்டத்திற்கும் இல்லையென்னாது மதியம் ஒரு மணிக்கு ஆரம்பிக்கும் சாப்பாட்டுô பந்தி மாலை நான்கு வரை தொடர்ந்து நடக்கும்.காவடிப் பிள்ளைகள் யாவரும் கலந்து கொண்டு உற்சாகமாக சளைக்காமல் பரிமாறுவார்கள்.நாள் முழுதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் காவடிகள். கடைசிக் காவடி இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து அதனுடன் பூர்த்தியடையும் அன்றைய பொழுது. மூன்றாம் நாள் காலை('நகரத்தார்கள் பூசத்திற்கு முதல் நாள் இரவு தண்டாயுதபாணி ஆலயத்தில இறக்கி வைத்த ) காவடிகளுக்கு 'காவடிப் பாட்டுகள்' பஜனைகள் செய்து நல்ல நேரம் பார்த்து காவடி தூக்கி ஆலயத்தின் அருகில் எதிர்ப்புற சாலையில் அமர்ந்திருக்கும் முனீஸ்வரரின் சன்னிதியின் முன் (சாலையில்) சிறிது நேரம் (காவடி) ஆடி அதன் பிறகு தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்புறம் ஆடுவார்கள்; (ஆட்டம்) அற்புதமாயிருக்கும்! அதன் பின் உள்ளே பிரகாரத்தில் நான்கு மூலையிலும் சிறிது சிறிது நேரம், அப்படியே பிரகாரமாய் வேலின் முன் வந்து வரிசையாக சன்னிதிக்குச் சென்று காவடியை தண்டாயுதபாணிக்குச் செலுத்துவார்கள். அப்படிக் கொண்டு செலுத்துவதற்குள் அவர்கள் ஒவ்வொருவரும் "முருகா முருகா" என்று துடிக்கும் துடிப்பு!.(பூசத்திற்கு முதல் நாள் இரவு கோவிலுக்குள் வந்த காவடிப் பிள்ளைகள் மூன்றாம் நாள் காவடி செலுத்திய பின்தான் வெளியில் வருவார்கள்) அதன் பிறகு தான் அவர்கள் எல்லோரும் குடும்பத்தாருடன் மலைக்குச்சென்று எந்த இடையூறும் இல்லாமல் நல்லபடியாக காவடி தூக்கிவர துணை நின்ற பால தண்டாயுதபாணிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சிதறுதேங்காய் உடைத்து நன்றி தெரிவித்து தரிசனம் பார்த்துò திரும்புவார்கள். அன்று இரவு ஏழு மணிக்கு ஆலயத்தில் இருந்து முருகப் பெருமான் வெள்ளி ரதத்தில் புறப்பட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடவர இரவு முழுதும் கோலாகலமாக வழியெங்கும் தேங்காய்கள் உடைத்து அர்ச்சனைகள் செய்து காலை ஏழு மணிக்கு மீண்டும் பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள கோவில் வீட்டை வந்து சேர்வார்.பினாங்கு'தைப்பூசம்' அவசியம் ஒரு தடவையாவது பார்க்க வேண்டும்.
எல்லோரும் தண்டாயுதபாணியின் அருள் பெற வேண்டி பிரார்த்திக்கிறேன்! அன்பு மீனா.

2 கருத்துகள்:

பவள சங்கரி சொன்னது…

அன்பு மீனா,

அற்புதமான கட்டுரை! உங்களுடன் வந்திருந்து தண்ணீர் மலை முருகனை, தைப்பூச நந்நாளில் வழிபட்ட திருப்தியை ஏற்படுத்திவிட்டது. படங்களும் அழகு. நன்றி தோழி.

அன்புடன்
பவள சங்கரி

michael raja antonyswamy சொன்னது…

arumai, reminds
Malaysia life