திங்கள், பிப்ரவரி 27, 2006

சிறுகூடல்பட்டி

சிறுகூடல்பட்டிக்கு மேலும் பெருமை சேர்த்துவிட்டது!
மதிப்பிற்குறிய கவிஞர் சக்திதாசன் அவர்கள் அளித்த வாழ்த்துப்பா!

சிறுகூடல்பட்டி தந்த
சிந்தனைச் செல்வனே !
சிறியதாயொரு கிராமமல்ல
சிறுகூடல்பட்டி
சிறப்புமிகு தலமே !
கவிபாடும் உலகில் குயில்
தந்த
காவியத்திரு ஊராம் கேளீர் !
தமிழன்னை புகழ்சொல்லும்
தலைமகனென்று மனம் துள்ளும்
கற்றவர் சபையும்
கண்தூக்கிப்பார்க்கும்
கவியரசன் என்னெஞ்சத்து
தேரிருக்கும்
கண்ணதாசனைத் தந்தவொரு
மண்ணன்றோ
கரம்கூப்பி வணங்கிடுவேன்
அவ்வூரை
அழகுமிகு பட்டுச்சேலைக்கு
கரைவைத்துப்
அலங்காரம் செய்கையில்
மிளிரும் சேலைபோல்
சுவையான தமிழிற்கு எம்
கவிஞன் தந்த
சுந்தரஎழில் கண்டு துள்ளாத
தமிழனும் உண்டோ?
தமிழர் நெஞ்சங்களில்
வரைபடமாய்
தங்கியிருக்கும்
சிறுகூடல்பட்டியே
மனமிறைந்து கவியரசன்
வணங்கும்
மலயரசித்தாயின் அருள்
மிகுஊராம்
தமிழ் வாழ்க, கவியரசன்
புகழ் வாழ்க
தங்கமகனையீன்ற
சிறுகூடல்பட்டி வாழ்க!

சக்தி
சக்திதாசன்


கவிஞர் சக்திதாசன் அவர்களுக்கு நன்றி மிகவும்


எத்தனை பெருமை எத்தனை பெருமை!
எங்களருமை கண்ணதாசனை ஈன்ற
என் ஊரை நினைக்கும் போதெல்லாம்
எனக்கெத்தனை பெருமை!

எங்களம்மா மலையரசி தாயே
எல்லோரையும் காத்தருள்வாயே

என்றும் அன்பு
மீனா.

கருத்துகள் இல்லை: